Duration 1:3

அம்மா உணவகம் சூறை.. திமுகவினர் மீது கடும் நடவடிக்கை /TAMIL SAN / TS

4 watched
0
0
Published 6 May 2021

சென்னை: சென்னை முகப்பேர் மேற்கு பத்தாவது பிளாக்கில் உள்ள 92வது வட்ட அம்மா உணவகத்தில் புகுந்து அம்மா உணவக பெயர் பலகையை அடித்து நொறுக்கிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது மேலும் அம்மா உணவகத்தில் பெயர் பலகையை மீண்டும் பொறுத்தவும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகவும் சைதாபேட்டை திமுக எம்எல்ஏ மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முன்னதாக சூறையாடப்பட்ட அம்மா உணவகத்திற்கு வந்த அதிமுகவினர் போராட்டம் நடத்தியதால் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. சென்னை முகப்பேர் மேற்கு பத்தாவது பிளாக்கில் உள்ள 92வது வட்ட அம்மா உணவகத்தில் புகுந்த திமுகவினர் சிலர் சூறையாடி உள்ளனர். இனி அம்மா உணவகம் என்ற பெயரில் உணவகங்கள் இருக்ககூடாது என்று பெயர் பலகைகளை உடைத்து, உணவகத்தை சூறையாடி, அங்கிருந்தவர்களை மிரட்டி ஜெயலலிதா படத்தை கீழே போட்டு உடைத்தனர் இது தொடர்பான வீடியோ காட்சி வெளியான நிலையில் அதிமுகவினர் கொதித்து போயினர். உடனடியாக அங்கு குவிந்த அதிமுகவினர் அம்மா உணவகத்தை சூறையாடிய திமுகவினரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர் இது தொடர்பாக திமுக எம்எல்ஏ மா சுப்பிரமணியன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும், அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் திமுக தலைவர் முக ஸ்டாலின் உடனடியாக உத்தரவிட்டார் என்று கூறியுள்ளார். #mkstalin #stalinaction #tamilnews

Category

Show more

Comments - 0